கேரளா: 5 வாரங்களுக்கு பின் பிரிட்டனுக்கு புறப்பட்ட போர் விமானம்

காணொளிக் குறிப்பு, கேரளா: 5 வாரங்களுக்கும் மேல் நின்றிருந்த பிரிட்டனின் F35-B விமானம் புறப்பட்டது
கேரளா: 5 வாரங்களுக்கு பின் பிரிட்டனுக்கு புறப்பட்ட போர் விமானம்

கேரளாவில் 5 வாரங்களுக்கும் மேலாக நின்றிருந்த பிரிட்டனின் F35-B விமானம் ஜூலை 22ஆம் தேதி புறப்பட்டு சென்றது.

கடந்த ஜூன் 14-ஆம் தேதி, இந்தியப் பெருங்கடலின் மீது பறந்துகொண்டிருந்த பிரிட்டனின் F35-B விமானம் மோசமான வானிலை காரணமாக, கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின்னர், அதில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதனை சரி செய்ய பலமுறை முயற்சி செய்தும் முடியாமல் போனது.

பின்னர், பிரிட்டனில் இருந்து வந்த பொறியாளர்கள் விமானத்தின் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு