தஞ்சை அருகே கோவில் குடமுழுக்கு விழாவுக்கு சீர் செய்த இஸ்லாமியர்கள் - காணொளி
தஞ்சை அருகே கோவில் குடமுழுக்கு விழாவுக்கு சீர் செய்த இஸ்லாமியர்கள் - காணொளி
தஞ்சாவூரில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்றது.
21 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்தக் குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வுக்கு இஸ்லாமியர்கள் 51 தட்டுகளில் சீர்வரிசை எடுத்து வந்தனர். இதுகுறித்து அவர்கள், "கோவிலில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதில் எங்களுடைய பங்களிப்பும் இருக்கும்." என்றனர்.
இந்த காட்சிகளை இந்த காணொளியில் காணலாம்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



