காமன்வெல் 2022: தங்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் - பதக்கம் குவிக்கும் இந்திய வீரர்கள்

காமன்வெல்த் போட்டியின் எட்டாம் நாளான வெள்ளிக்கிழமை இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகிறார்கள். மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர். மற்ற வீரர்களும் பதக்கங்களை குவித்து வருகிறார்கள். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ, பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை: முக்கிய துளிகள்

  2. இலங்கை வரும் சீன கப்பலால் இந்தியாவிற்கு அச்சுறுத்தலா?

  3. தைவானை சுற்றி போர் ஒத்திகையை தொடங்கிய சீனா

  4. காமன்வெல் விளையாட்டு: தங்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், பக்கம் குவித்த அன்ஷு மாலிக் மற்றும் வீரர்கள்

    காமன்வெல்த் விளையாட்டு

    பட மூலாதாரம்,

    காமன்வெல்த் மல்யுத்த போட்டியின் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா 9க்கு 2 என்ற கணக்கில் கனடாவின் லாச்லன் மெக்நீலை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

    பர்மிங்காமில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 5) நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் (CWG) 2022 போட்டியில் 65 கிலோ பிரிவு மல்யுத்த இறுதிப் போட்டியில் பஜ்ரங் புனியா, கனடாவின் லாச்லன் மெக்நீலை வீழ்த்தி இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்றார்.

    அவர் அரையிறுதியில் (10-0) என்ற வெற்றியுடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே, அவர் தனது வழியில் வரும் எந்த எதிராளியையும் முறியடிக்க விடாமல் இருந்தார். இறுதிச் சுற்றில் 1-வது சுற்றுக்குப் பிறகு பஜ்ரங் 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார் . பஜ்ரங்கின் மூன்றாவது காமன்வெல்த் பதக்கம் இதுவாகும். முன்னதாக, அவர் 2014இல் நடந்த காமன்வெல் போட்டியில் அவர் வெள்ளிப்பதக்கம் வென்றார். பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் கோல்ட் கோஸ்டில் நடந்த போட்டியில் தங்கம் வென்றார்.

    சாக்ஷி மாலிக், 62 கிலோ பிரிவில் தங்கம் வென்றார்.

    29 வயதான இவர் காலிறுதியில் இங்கிலாந்தின் கெல்சி பார்ன்ஸை 10-0 என்ற கணக்கில் தோற்கடித்தார், பின்னர் அரையிறுதியில் கேமரூனின் பெர்தே எமிலியென் எடேன் என்கோல்லை 10-0 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தார்.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    அன்ஷு மாலிக்குக்கு வெள்ளி

    இந்திய மல்யுத்த வீராங்கனை அன்ஷு மாலிக் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான 57 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இறுதிப் போட்டியில், நைஜீரியாவின் ஒடுனாயோ அடேகுரோயேவிடம் அன்ஷு மாலிக் சவாலை எதிர்கொண்டார். அடேகுரோய் 7-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றார்.

    முன்னதாக, முதல் பீரியட் ஆட்டத்தில் அன்ஷுவால் ஒரு புள்ளியைக் கூட பெறவில்லை. அதே சமயம், நைஜீரிய மல்யுத்த வீராங்கனை 4 புள்ளிகள் எடுத்தார்.

    இரண்டாவது கட்டத்தில், அன்ஷு கடுமையாக போராடினார், ஆனால் இறுதியில் நைஜீரிய மல்யுத்த வீரர் தங்கத்தை வென்றார். இன்று அவரது பிறந்த நாளும் கூட.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

    பாரா டேபிள் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-5 என்ற புள்ளிகள் கணக்கில் பவினா படேல் பதக்கத்தை உறுதிப்படுத்தினார்.

    மல்யுத்தம்: பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் தங்கம் வென்றனர். அன்ஷு மாலிக் வெள்ளி வென்றார். தீபக் புனியா இறுதிப் போட்டியை எட்டினார்.

    டேபிள் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் அசந்தா ஷரத் கமல்-ஸ்ரீஜா அகுலா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது, மனிகா பத்ரா-ஜி சத்தியன் வெளியேறினர்.

    X பதிவை கடந்து செல்ல, 3
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 3

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, மத்திய பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (இளங்கலை) இந்த இடங்களில் தள்ளிவைப்பு

    CUET (UG) – 2022 தேர்வு தொடர்பாக பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன:

    1. ஆகஸ்ட் 5, 2022 அன்று முதல் ஷிப்டில் திட்டமிடப்பட்ட தேர்வு 20 தேர்வு மையங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    2. ஆகஸ்ட் 5, 2022 அன்று இரண்டாவது ஷிப்டில் திட்டமிடப்பட்ட தேர்வு 30 மையங்களில் ஒத்திவைக்கப்பட்டது.

    3. தேர்வு தொடர்பான சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு NTA இணையதளம்(கள்) www.nta.ac.in மற்றும் https://cuet.samarth.ac.in/ ஆகியவற்றைப் பார்க்க விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    4. சில மையங்களில் தொழில்நுட்ப சிக்கல்கள் பற்றிய அறிக்கைகளை NTA உடனடியாக கவனத்தில் எடுத்தது. களத்தில் உள்ள பார்வையாளர்கள் / நகர ஒருங்கிணைப்பாளர்களிடம் இருந்து அறிக்கைகள் கேட்கப்பட்டன. அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், ஒத்திவைப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    5. மாணவர்களின் நலன் கருதி தேர்வுகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய NTA உறுதிபூண்டுள்ளது.

    இந்தியா

    பட மூலாதாரம், NTA

  6. குருதி ஆட்டம் - திரைப்பட விமர்சனம்

  7. இலங்கையில் செயல்பாட்டாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுக்கு எதிராக வலுத்த ஆசிரியர்களின் போராட்டம்

  8. பர்கூர் அருகே கார் மோதி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த மூன்று பேர் உயிரிழப்பு

    விபத்து

    பர்கூர் அருகே சாலையில் சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர் ஜெகதீஷ். கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அங்கிநாயக்கனப்பள்ளி என்னும் இடத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரை பார்ப்பதற்காக சின்ன பர்கூரை சேர்ந்த பாக்கியராஜ், மல்லப்பாடி நாடார் கொட்டாயை சேர்ந்த சுஜித் குமார் மற்றும் பிரசாந்த் என்பவர் உட்பட மூன்று பேர் அங்கிநாயனப்பள்ளிக்கு வந்துள்ளனர். பின்னர் ஜெகதீசை சந்தித்து நான்கு பேரும் சாலையோரம் பேசிக்கொண்டே நடந்து சென்றிருக்கின்றனர்.

    அப்போது சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற நான்கு பேர் மீதும் வேகமாக மோதியது. இதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பாக்கியராஜ், சுஜித் குமார் மற்றும் பிரசாந்த் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஜெகதீஷை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காரை ஓட்டிவந்த ஓசூர் மூக்கொண்டப்பள்ளி தணிகைமலையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து பர்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  9. இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரும் சீன கப்பல்

    இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரும் சீன கப்பல். கவலையை வெளிப்படுத்தும் இந்தியா. தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களை கண்காணிக்க உள்ளதா சீன கப்பல்? #Explained

  10. போர் ஒத்திகையில் சீனா; அமெரிக்காவின் பதிலடி என்ன?

    தைவானை சுற்றி நேரடியான போர் ஒத்திகையை சீனா தொடங்கியுள்ளது. போர் சூழல் உருவாகியுள்ளதால், தைவான் மக்கள் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  11. பிரதமர் மோதியை சந்தித்த மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி

    மமதா பானர்ஜி - நரேந்திர மோதி

    பட மூலாதாரம், Twitter/@PMOIndia

    மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி இன்று இந்திய பிரதமர் மோதியை நேரில் சந்தித்தார்.

    மேற்கு வங்க மாநிலத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டிருக்கலாம் என, பிடிஐ செய்தி முகமை வட்டாரங்களை மேற்கோளிட்டு பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    டெல்லியில் மமதா பானர்ஜி நான்கு தினங்கள் தங்கவுள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார். மேலும், குடியரசுத் தலைவரையும் அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

    குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் பங்கெடுக்க மாட்டார்கள் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    பாஜக சார்பாக மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சி வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார்.

  12. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை: 70 ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்காத வலி

  13. மூன்று குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை முயற்சி

    தற்கொலை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

    இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

    திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட க.உண்ணாமலைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் - அமுதா. இவர்களின் குழந்தைகள் 5 வயதான நிலவரசன், 3 வயதான குறளரசன், 2 வயதான யாஷினி ஆகியோர் உறவினர்களோடு சேர்ந்து கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். கூட்டுக் குடும்பத்தில் மனக்கசப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது.

    இதில் விரக்தி அடைந்த அமுதா தனது மூன்று குழந்தைகளோடு வாழவச்சனூர் கிராம எல்லையில் உள்ள ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் மூன்று குழந்தைகளும் உயிரிழந்தன.

    இதையடுத்து தென்பெண்ணை ஆற்றில் மூன்று குழந்தைகள் மூழ்கியதாக கிடைத்தத் தகவலின் அடிப்படையில் போலீசார் சென்று மூன்று குழந்தைகளின் சடலங்களை மீட்டனர். தாய் அமுதா ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

  14. மின்சாரம் தாக்கி உயிரிழப்பு - இழப்பீடு தொகையாக ரூ.9 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

    உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

    மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.9 லட்சம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    திருச்சியை சேர்ந்த லட்சுமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "என் கணவர் பழனிச்சாமி விவசாயம் செய்வதற்காக தனது நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மின்கம்பத்துடன் கேபிள் டிவி வயர் இணைக்கப்பட்டிருந்தது. இயற்கை சீற்றம் காரணமாக கேபிள் வயர் அறுந்து விழுந்தது. கேபிள் டிவி வயர் 12.6.2006 பாசனத்திற்கு சென்ற எனது கணவர் தலையில் பட்டு சம்பவ இடத்திலேயே எனது கணவர் உயிரிழந்தார்.

    எனது கணவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்று உறுதி செய்யப்பட்டது. எனவே, இழப்பீடு தொகையாக ரூ.15 லட்சம் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார் பிறப்பித்த உத்தரவில், "மின் கம்பத்துடன் சட்டவிரோதமாக கேபிள் டிவி வயர் இணைக்கப்பட்டு இருந்ததை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்படி எடுக்கப்பட்டிருந்தால் இத்தகைய விபத்து நிகழ்ந்திருக்காது. மனுதாரரின் கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என்பது தெரிய வருகிறது.

    எனவே, மனுதாரருக்கு ரூ.9,07,104-ஐ 12.6.2006 முதல் தற்பொழுது வரை ஆண்டுக்கு 6% வட்டியுடன் இணைத்து 12 வாரத்திற்குள் வழங்க வேண்டும்" என, தமிழ்நாடு மின்வாரிய தலைவருக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.

  15. பிசிஓடி பிரச்னை வந்தால் கருவுற முடியாதா? மருத்துவர் ஜலதா ஹெலன் விளக்கம்

  16. தைவான் விவகாரம்: இதுவரை என்ன?

    தைவான் - சீனா

    பட மூலாதாரம், GETTY IMAGES

    நீங்கள் இந்த நேரலை பக்கத்துக்கு இப்போதுதான் வருகிறீர்கள் என்றால், தைவானில் நடந்த சமீபத்திய நிலவரத்தை அறிய உங்களுக்காக இதோ சில முக்கிய தகவல்கள்:

    • தைவானைச் சுற்றி சீனா தனது மிகப்பெரிய ராணுவ ஒத்திகையை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடத்தி வருகிறது.
    • சீன போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்கள் அதிக அளவில் இரண்டாவது நாளாக சீனாவை பிரிக்கும் கடல் பகுதி அலுவல்பூர்வமற்ற தைவான் நீரிணையை கடந்து தங்களுடைய பிராந்தியத்துக்குள் வந்துள்ளதாக தைவான் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
    • அமெரிக்க ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவரும் அந்நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகருமான நான்சி பெலோசியின் தைவான் வருகைக்குப் பிறகு தைவானை ஒட்டிய கடல் பகுதியில் சீனா ராணுவ ஒத்திகையை மேற்கொண்டிருக்கிறது.
    • தைவான் வருகைக்குப் பிறகு ஜப்பானுக்கு சென்றுள்ள நான்சி பெலோசி, அமெரிக்க அரசியல்வாதிகள் தைவான் செல்வதைத் தடுக்கும் வகையில் அவர்கள் மீது சீனா நடவடிக்கை எடுத்தாலும் தைவானை "தனிமைப்படுத்த" அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.
    • தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ, பிபிசியிடம் பேசும்போது, "சீனாவின் ஆளுகை விரிவாக்க கனவின் கடைசி துண்டாக தைவான் இருக்கப்போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்
  17. "ஓ. பன்னீர்செல்வம் வழக்கை யார் விசாரிப்பது என தலைமை நீதிபதி முடிவுசெய்வார்"

    ஓ.பன்னீர்செல்வம்

    பட மூலாதாரம், GETTY IMAGES

    ஓ. பன்னீர்செல்வம் வழக்கை யார் விசாரிப்பது என சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே முடிவு செய்வார் என அந்த வழக்கை விசாரித்துவந்த தனி நீதிபதி கூறியிருக்கிறார்.

    இந்த வழக்கை தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக்கூடாது எனவும் வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமெனவும் தலைமை நீதிபதியிடம் கடிதம் அளித்ததற்காக மன்னிப்புக் கோருவதாகவும் கிருஷ்ணன் ராமசாமி முன்பே வழக்கை நடத்த விரும்புவதாகவும் சற்று முன்னர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் கூறியிருந்தார். மேலும், கடிதத்தை திரும்பப் பெறுவது குறித்து ஓ. பன்னீர்செல்வத்திடம் கேட்டுவிட்டு பதிலளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து வழக்கு சிறிது நேரத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டது.

    மீண்டும் வழக்கின் விசாரணை தொடங்கியவுடன் ஆஜரான ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், தலைமை நீதிபதியிடம் கொடுத்த கடிதத்தை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மனு தாக்கல் செய்து, அந்தத் தகவலை தனி நீதிபதியிடம் தெரிவித்தார்.

    இதற்குப் பிறகு, இந்த வழக்கை திரும்பவும் தலைமை நீதிபதிக்கே அனுப்பவதாகவும் அதனை யார் விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதியே முடிவுசெய்வார் என்றும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

  18. தைவானில் இன்று என்ன நடக்கிறது? அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்கள்

  19. தென் மேற்கு பருவமழை: தமிழக ஆறுகளில் வெள்ளம் - கள நிலவரம்

  20. வழக்கை வேறு நீதிபதியிடம் மாற்றக்கோரிய விவகாரம் - மன்னிப்புக் கோரியது ஓபிஎஸ் தரப்பு

    ஓ.பன்னீர்செல்வம்

    தங்களது வழக்கை வேறு நீதிபதி விசாரிக்க வேண்டுமெனக் கோரிய விவகாரத்தில் மன்னிப்புக் கோருவதாக ஓ. பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது.

    ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு தொடர்பாக பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்துவுடன் இணைந்து ஓ. பன்னீர்செல்வம் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக்கூடாது என வைரமுத்துவும் ஓ. பன்னீர்செல்வமும் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தனர்.

    இந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட தனி நீதிபதியுடன் விவாதித்து முடிவெடுப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார். இதற்கிடையில், முன்பே பட்டியலிட்டபடி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க கால அவகாசம் தேவைப்படுவதாகவும் வழக்கை நாளைக்குத் தள்ளிவைக்க வேண்டுமென்றும் வைரமுத்து தரப்பு கோரியது.

    அதற்குப் பிறகு, இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் கடிதம் கொடுத்திருப்பதாகவும் வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டுமென்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது, வேறு நீதிபதி விசாரிக்க கோரியதைக் குறிப்பிட்டு, "உங்களது கருத்து நீதித் துறைக்கு களங்கம் விளைவிக்கும்படியும் கீழ்த்தரமானதாகவும் இருக்கிறது. நீதித் துறைக்கு களங்கம் ஏற்படுத்துவதைப் போல நடந்துகொள்ளாதீர்கள்" என்றும் நீதிபதி கூறினார்.

    இந்த நிலையில் அந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பே விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான ஓ. பன்னீர்செல்வம் தரப்பு, இந்த வழக்கை அவர் முன்பாகவே வாதிட விரும்புவதாகவும் வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமெனக் கோரியதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்தது.

    மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்தைக் கேட்டு, தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை திரும்பப் பெறுவதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். இதற்காக வழக்கு சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.