டேபிள் டென்னிஸ்: காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு 5 ஆவது தங்கம்

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தங்கம் வென்றுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நேயர்களுக்கு நன்றி!

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:

    • சர்வதேச சதுரங்கப் போட்டியான 44ஆவது செஸ் ஒலிம்பியாடில் இந்திய அணி வீரர்கள் முன்னணி வகிக்கின்றனர்.
    • காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தங்கம் வென்றுள்ளது. இதுவரை 4 தங்கம் வென்றிருந்த நிலையில், இத்துடன் சேர்த்து தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
    • காமன்வெல்த் போட்டியில் ‘லான்பவுல்’ விளையாட்டில் இந்திய பெண்கள் அணி முதல்முறையாக தங்கம் வென்றுள்ளது.
    • "மாநிலங்கள் தங்கள் வருவாயைப் பெருக்க போதுமான வாய்ப்புகள் இல்லையென்பதால் மத்திய அரசுதான் வரிகளைக் குறைக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசு இதுவரை பெட்ரோலுக்கு ரூ 4.95 குறைத்துள்ளதாகவும்" இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தன் அறிக்கை மூலம் மறுமொழி அளித்துள்ளார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
    • பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பயணித்த, லெப்டினன்ட் ஜெனரல், ராணுவ அதிகாரிகள் உட்பட 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
    • டெல்லியில் வசிக்கும் நைஜீரிய நபர் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. அத்துடன், டெல்லியில் இது மூன்றாவது தொற்று என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி, அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை மேற்கொள்வதற்கு நேற்றைய தினம் கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, நீதி அமைச்சர் சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
    • சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தானு,எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை
    • கனமழை காரணமாக கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதாகவும் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்
  2. "பெரியார் சிலைகளை உடையுங்கள்" - வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது

    பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என அவதூறு வீடியோ வெளியிட்ட தென்காசி மாவட்ட பா.ஜ.க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

    "பெரியார் சிலைகளை அடித்து உடையுங்கள். சாணியை அபிஷேகம் செய்யுங்கள். செருப்பு மாலை அணிவியுங்கள்" என்று பாஜக தென்காசி மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் கிருஷ்ணன் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    இது குறித்து தென்காசி மாவட்டம் புளியங்குடி போலீசார் இந்திய தண்டணை சட்டம் பிரிவு 153(A), 505 (1) ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  3. இலங்கையில் மோசமடையும் வானிலை: மூவர் பலி, நால்வரை காணவில்லை

  4. காமன்வெல்த் 'லான் பவுல்': தங்கம் வென்ற 4 இந்திய வீராங்கனைகள் - இது என்ன விளையாட்டு?

  5. டேபிள் டென்னிஸ்: இந்தியாவுக்கு 5 ஆவது தங்கம்

    காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தங்கம் வென்றுள்ளது. இதுவரை 4 தங்கம் வென்றிருந்த நிலையில், இத்துடன் சேர்த்து தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    இறுதிப்போட்டியில் சிங்கப்பூரை எதிர்கொண்ட இந்திய அணி சார்பில் தமிழக வீரர்கள் சரத்கமல், சத்யன் ஞானசேகரன் ஆகிய இருவரும் விளையாடி தங்கம் வென்றனர்.

    சத்யன் ஞானசேகரன்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சத்யன் ஞானசேகரன்
  6. புதுச்சேரி தியாகச்சுவரில் 'சாவர்க்கர்' பெயர்: வலுக்கும் எதிர்ப்பு - விட்டுக்கொடுக்காத ஆளுநர்

  7. லான் பவுல் - இந்தியாவுக்கு 4 ஆவது தங்கம்

    காமன்வெல்த் போட்டியில் ‘லான்பவுல்’ விளையாட்டில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றுள்ளது.

    இதுவரை இந்தியா மூன்று தங்கம் வென்றுள்ள நிலையில், நான்காவது தங்கம் எந்தப்போட்டியிலிருந்து வரப்போகிறது என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், லான் பவுல் என்ற விளையாட்டில் பெண்கள் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.

    Lawn bowl

    பட மூலாதாரம், Getty Images

  8. நடிகை சித்ரா மரண வழக்கு: கணவர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

  9. "மத்திய அரசுதான் வரிகளைக் குறைக்க வேண்டும்": பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

    நிதியமைச்சர்

    பட மூலாதாரம், FACEBOOK

    படக்குறிப்பு, நிதியமைச்சர்

    பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தன் அறிக்கை மூலம் மறுமொழி அளித்துள்ளார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

    குறிப்பாக, "மாநிலங்கள் தங்கள் வருவாயைப் பெருக்க போதுமான வாய்ப்புகள் இல்லையென்பதால் மத்திய அரசுதான் வரிகளைக் குறைக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசு இதுவரை பெட்ரோலுக்கு ரூ 4.95 குறைத்துள்ளதாகவும்" அவர் தெரிவித்திருக்கிறார்.

    ஆகஸ்ட் ஒன்றாம் தேதியன்று இந்திய நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விலைவாசி உயர்வு குறித்துப் பேசும்போது, மாநில அரசு பெட்ரோலுக்கான வரியைக் குறைக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,

    • மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தனது வரிகளை குறைப்பதற்கு முன்பே, தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 2021ல் பெட்ரோல் மீதான வரியில் மூன்று ரூபாய் குறைத்துள்ளது.
    • மேலும், மத்திய அரசின் வரி குறைப்பால் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 1 ரூபாய் 95 பைசா குறைந்துள்ளது. அதாவது, பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 4 ரூபாய் 95 பைசா குறைந்துள்ளது. அதேபோல் டீசல் மீதான மாநில அரசின் வரி 1 ரூபாய் 76 பைசாவாகக் குறைந்துள்ளது. எனவே, தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் மீதான வரி 5 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதில், 4 ரூபாய் 95 பைசா குறைக்கப்பட்டுள்ளது. டீசல் மீதான வரி 4 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதில் 1 ரூபாய் 76 பைசா குறைக்கப்பட்டுள்ளது.
    • கடந்த ஏழு ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு தனது வரியை பலமுறை உயர்த்தி வந்தது. இதனால், மத்திய அரசிற்கு வருவாய் பல இலட்சம் கோடி ரூபாய் உயர்ந்திருந்தாலும், மாநில அரசுகளின் வருவாய்களில் உயர்வு ஏற்படவில்லை. ஏனென்றால், மாநில அரசுகளுடன் பகிரக்கூடிய கலால் வரியைக் குறைத்து, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
    • மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை 23.42 ரூபாயாகவும் (247%), டீசல் மீதான வரியை 28.23 ரூபாயாகவும் (790%) கடந்த ஏழு ஆண்டுகளில் உயர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்திலும் நவம்பர் மாதத்திலும் சேர்த்து பெட்ரோல் மீதான வரியை 13 ரூபாயாகவும், டீசல் மீதான வரியை 16 ரூபாயாகவும் குறைத்துள்ளது. ஆனால், 2014ஆம் ஆண்டிலுள்ள வரி நிலவரத்தை ஒப்பிடும்போது, தற்போதுள்ள வரிகள் பெட்ரோல் மீது லிட்டருக்கு 10.42 ரூபாயும் (110%), டீசல் மீது லிட்டருக்கு 12.23 ரூபாயும் (342%) என உள்ளது. ஆகவே மத்திய அரசு தனது வரிகளை மேலும் குறைக்க வேண்டிய தேவை உள்ளது.
    • ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாநிலங்களுக்கு வரி விதிப்பதில் அதிகாரம் பெருமளவில் குறைந்துள்ளது. மாநிலங்கள் தங்களது வருவாயைப் பெருக்குவதற்கு போதிய வாய்ப்புகள் இல்லை. எனவே, சாமானிய மக்களுக்கு உதவுவதற்கு ஒன்றிய அரசுக்குத்தான் வாய்ப்புகளும், வசதிகளும் உள்ளது. அதைப் பயன்படுத்தி, ஒன்றிய அரசு வரிச்சுமையைக் குறைக்க முன்வர வேண்டும்" என்று தனது அறிக்கையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டிருக்கிறார்
  10. தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு தண்டனை காலம் குறைப்பு

    ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால், தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை எஸ். தனலட்சுமி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இருந்து விலக்கப்பட்டார்.

    இந்த நிலையில், தனலட்சுமிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்காலம் 4 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

    அத்துடன், தவறை ஒப்புக் கொண்டதால் இந்த தண்டனை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மேலும் அறிய, இந்த இணைப்பில் படியுங்கள்.

  11. தமிழ்நாட்டில் அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள் - உண்மையில் யார் மீது தவறு? - கள நிலவரம்

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து; ராணுவ அதிகாரிகள் 6 பேர் மரணம்

    பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பயணித்த, லெப்டினன்ட் ஜெனரல், ராணுவ அதிகாரிகள் உட்பட 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள், பலுசிஸ்தானில் கிடைத்துள்ளன.

    மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்ததாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளரின் அலுவல்பூர்வ ட்விட்டரில் தெரிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், இந்த ஹெலிகாப்டர் மாயமானதாக சொல்லப்பட்டது.

    X பதிவை கடந்து செல்ல, 1
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 1

    இது தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல, 2
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு, 2

  13. "கல்விச் சான்றிதழ்கள் அடமான பொருட்களல்ல" - உயர் நீதிமன்ற மதுரை கிளை

    உயர் நீதிமன்ற மதுரை கிளை
    படக்குறிப்பு, உயர் நீதிமன்ற மதுரை கிளை

    கல்விச் சான்றிதழ்கள் ஒருபோதும் விற்பனை பொருட்கள் ஆகாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

    முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரும் போது தாங்கள் கல்லூரியில் சமர்ப்பித்த, சான்றிதழ்களை தங்களிடம் திருப்பித்தர உத்தரவிட கோரி இரண்டு மாணவர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர்கள் KAP விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்பிற்காக சேர்ந்துள்ளனர். சேர்க்கையின் போது, தமிழ்நாடு அரசுக்காக 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்றும் தவறினால், 50 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

    படிப்பை வெற்றிகரமாக முடித்த நிலையில், ஒப்பந்த அடிப்படையில் மனுதாரர்கள் பணியாற்ற விரும்பவில்லை. எனவே அதிகாரிகள் அவர்களது சான்றிதழ்களைத் திரும்ப ஒப்படைக்கவில்லை.

    இந்த வழக்கின் விசாரணையின்போது, "கல்வி சான்றிதழ்கள் ஒருபோதும் விற்பனை பொருட்கள் ஆகாது. அடமான பொருட்களாகவும் ஏற்றுக் கொள்ள இயலாது. ஆகவே, மாணவர்களின் அசல் சான்றிதழ்களை எவ்வித காலதாமதமும் இன்றி ஒப்படைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

  14. பேரீச்சை சாகுபடியில் அசத்தி வரும் தருமபுரி விவசாயி

  15. ஆர்.பி.உதயகுமாரின் ஊழல்களை பேச நேரம் போதாது - நிதியமைச்சர் பி.டி.ஆர்

    பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

    பட மூலாதாரம், Facebook

    படக்குறிப்பு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்த ஊழல் குறித்து பேசுவதற்கு நேரம் போதாது என மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

    மதுரை வட்டார புத்தாக்க மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார்,

    மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க மதுரை வட்டார புத்தாக்க மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார், மதுரையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங், மாநகராட்சி மேயர் இந்திராணி ஆகியோர் பங்கேற்றனர்.

    மதுரை, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் வட்டார புத்தாக்க மையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஆர்.பி உதயகுமாரின் கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. ஆர்.பி.உதயகுமார் செய்த ஊழல் குறித்து பேசுவதற்கு நேரம் போதாது. மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

    பெரிய முதலீட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க முன் வந்தாலும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிக முக்கியமானது,.

    தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. தமிழகத்தில் புதிய உத்தியுடன் 2 இலட்ச ரூபாய் இருந்தால் தொழில் தொடங்கலாம். இந்த ஸ்டார்ட் ஆஃப் தமிழ்நாடு திட்டத்தில் சமூக நீதி காக்கப்பட்டு வருகிறது, அனைத்து தரப்பினருக்கும் தொழில் தொடங்க வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது, ஸ்டார்ட் ஆஃப் தமிழ்நாடு திட்டத்தால் 2 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான புதிய சிறு, குறு நிறுவனங்கள் உருவாகும்" என கூறினார்

    முன்னதாக "அதிமுக ஆட்சி காலத்தில் எந்த திட்டமும் செய்யவில்லை என்ற பி.டி.ஆரின் பேச்சு முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல்" என ஆர்.பி.உதயகுமார் அறிக்கை விடுத்திருந்தார்.

  16. காணாமல் போன மீனவர்கள்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி

    கடலோர காவல்படை விமானம்
    படக்குறிப்பு, கடலோர காவல்படை விமானம்

    மீன்பிடிக்க சென்றபோது காணாமல் போன திருச்செந்தூர் மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியில் ஈடுபடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து கடலோரக் காவல்படைக்கு சொந்தமான விமானம் மூலம் தேடும் பணி தொடங்கியுள்ளது.

    திருச்செந்தூர் அமலிநகர் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் தினசரி நள்ளிரவு பைபர் படகில் மீன்பிடித் தொழிலுக்கு சென்று விட்டு, அன்று மாலை கரை திரும்புவது வழக்கம். அதேபோல் மீனவர்கள் நேற்று நள்ளிரவு மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

    இப்படியாக நேற்று மீன்பிடி தொழிலுக்கு சென்ற படகுகள் கரைக்கு வந்து நிலையில், அதே பகுதியை சேர்ந்த அஸ்வின்(32), பிரசாத்(40), பால்ராஜ் (22), நித்தியானந்தம் (42) ஆகியோர் சென்ற படகு மட்டும் பலத்த காற்றின் காரணமாக கடலில் கவிழ்ந்தது. இதில் பால்ராஜ், நித்தியானந்தம் ஆகியோர் கடலில் தத்தளித்ததை பார்த்த மற்ற படகில் சென்ற மீனவர்கள் காப்பாற்றினர்.

    மேலும் அஸ்வின், பிரசாத் ஆகியோரை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. கடலில் காற்றின் வேகம் அதிக அளவு காணப்பட்டதால் மீட்கப்பட்ட இரண்டு பேரை மட்டும் கரைக்கு அழைத்து வந்தனர். இந்த தகவலறிந்த அமலிநகர் மீனவர்கள் 15 படகில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கடலுக்கு சென்று தேடும் பணியில் நேற்று மாலையில் இருந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் ஹெலிகாப்டர், கடற்படை கப்பல் மூலம் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் இந்திய கடலோர காவல்படையின் விமானம் ஈடுபட்டுள்ளது. இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானம் மூலம் மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  17. உயரும் விலைவாசி, சரியும் இந்திய ரூபாய் மதிப்பு - உண்மை நிலை என்ன?

  18. தலைவெட்டி முனியப்பன் இல்லை; அது புத்தர் சிலை - தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க உத்தரவு

  19. டெல்லியில் வசிக்கும் நைஜீரிய நபருக்கு குரங்கம்மை

    டெல்லியில் வசிக்கும் நைஜீரிய நபர் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. அத்துடன், டெல்லியில் இது மூன்றாவது தொற்று என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக கேரளாவில் ஒருவருக்கும் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தில் குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  20. ஜவாஹிரியை பதுங்கியிருந்து பழிதீர்த்த சிஐஏ - பால்கனியில் நின்றவர் கொல்லப்பட்டது எப்படி?